சின்னத்திரை சீரியல்களில் மக்களால் கொண்டாடப்பட்ட சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி தான். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலில் மீனாட்சியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் இதில் ரியோவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகை ரச்சிதா, கடந்த 2015-ம் ஆண்டு சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் சீரியல்களில் நடித்து வந்தனர். குறிப்பாக நாச்சியார்புரம் என்கிற சீரியலில் கூட இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலின் போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு ரச்சிதா தரப்பில் எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படததால் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் எண்ணத் தொடங்கினர். இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த தினேஷ், சமீபத்தில் மனம்திறந்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறுகையில், “ரச்சிதா உடனான பிரிவு தற்காலிகமானது தான் என கூறி இருக்கிறார்.