இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது வேட்டையன் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய சமூக ஊடக கணக்கில் தன்னுடைய ரசிகர்களோடு பேசிக் கொண்டிருந்த கே.இ ஞானவேல் ராஜா, ஒரு தகவலினை வெளியிட்டு இருந்தார். அதாவது அண்மையில் ஒரு திரைப்படம் வெளியானது, அந்த திரைப்படத்தில் பெரிய பெரிய நடிகர்கள் நடித்திருந்தார்கள், பெரிய அளவில் அப்பட நிறுவனம் அதை பிரமோஷனும் செய்தது. ஆனால் இப்பொழுது அந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை என்று பேசி இருந்தார்.
இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் குறித்து தான் ஞானவேல் ராஜா அவ்வாறு பேசியதாக சில தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அது குறித்து ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த ஞானவேல் ராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்ட பொழுது, அதற்கு பின்வருமாறு பதில் அளித்து இருந்தார்..