ப்ரியங்கா முதல் மாகாபா ஆனந்த் வரை - கிறுகிறுக்க வைக்கும் அளவிற்கு சம்பளம் வாங்கும் டாப் 4 Anchors!

First Published Sep 21, 2024, 11:26 PM IST

Top 4 Anchors : விஜய் டிவியை பொறுத்தவரை அதில் தொகுப்பாளராக பயணிக்கும் பலரும் பெரிய பிரபலன்களாக திகழ்ந்தது வருவது குறிப்பிடத்தக்கது.

Anchors Gopinath

விஜய் டிவியை பொறுத்தவரை அதில் பயணிக்கும் பல தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள், சினிமாவிலும் இப்போது ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தமிழக சின்னத்திரை வரலாற்றைப் பொறுத்தவரை விஜய் டிவியில் பணியாற்றி வரும் நான்கு முக்கிய தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் தான் மிகப்பெரிய அளவில் சம்பளம் பெறுகிறார்களாம். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் தான் கோபிநாத். இவர் அவ்வப்போது சில திரைப்படங்களிலும் நடிப்பது உண்டு. "நீயா நானா" என்கின்ற நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்தி பலர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் கோபிநாத். மேலும் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க மட்டும் சுமார் 5 லட்சம் ரூபாயை அவர் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

"மொத்த தமிழ்நாடும் ஒரே பாட்டில்" ஸ்பாட்டில் லிரிக் எழுதி அசத்திய பேரரசு - எந்த பாட்டு தெரியுமா?

Makapa Anand

விஜய் டிவி பொறுத்தவரை இப்போது ஸ்டார் ஆன்கராக திகழ்ந்து வருபவர் தான் மா.கா.பா ஆனந்த், ஒரு சில திரைப்படங்களில் நாயகனாகவும், பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரம் ஏற்றும் நடித்தும் அசத்திய இவர், விஜய் டிவியை பொருத்தவரை ஒரு மிகப்பெரிய ஸ்டார் தான். இன்னும் சொல்லப் போனால் விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் விலகிய காலத்தில் இருந்து, அவருக்கு பதிலாக அவர் நடத்திய பல நிகழ்ச்சிகளை மாகாபா ஆனந்த் தான் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இப்போது மிகச் சிறந்த தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார். ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு சுமார் 2.5 முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை இவர் சம்பளமாக பெறுகிறாராம்.

Latest Videos


Anchor Priyanka

அண்மையில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி தான் பிரியங்கா. என்ன தான் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், பலருக்கும் மிகவும் பிடித்த தொகுப்பாளினிகளில் பிரியங்காவும் ஒருவர். அது மட்டும் அல்லாமல், விஜய் டிவியை பொறுத்தவரை மாகாபா மற்றும் கோபிநாத் போன்ற வெகு சில சீனியர்களே உள்ள நிலையில், பெண் தொகுப்பாளர்களில் சீனியராக இப்போது அங்கு திகழ்ந்து வருவது பிரியங்கா மட்டும்தான். இவரும் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க சுமார் 2.5 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறாராம்.

Rakshan

துல்கர் சல்மானோடு "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்று தொடங்கி, இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி அருகே நின்று நடனமாடும் அளவிற்கு உயர்ந்திருக்கும் ஒரு நடிகர் தான் ரக்சன். சின்னத்திரையை பொறுத்தவரை இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த பல சீசன்களை இவர் தான் தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் ஸ்டண்ட் பைக் ஓட்டுனராகவும் இவர் பயிற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரை பொறுத்தவரை ஒரு எபிசோடை தொகுத்து வழங்க, இவர் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறாராம்.

விவாகரத்து முடிவுக்கு பின்.. ஆர்த்தியோடு நடந்த "அடுத்த பிரச்சனை" - போராடி வெற்றி பெற்ற ஜெயம் ரவி!

click me!