"மொத்த தமிழ்நாடும் ஒரே பாட்டில்" ஸ்பாட்டில் லிரிக் எழுதி அசத்திய பேரரசு - எந்த பாட்டு தெரியுமா?

First Published Sep 21, 2024, 11:02 PM IST

Director Perarasu : தளபதி விஜய் மற்றும் தல அஜித் போன்ற பல டாப் நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் பேரரசு.

Director Perarasu

சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து ஏ.வி.எம் ஸ்டுடியோ வாசலில் பல நாள் தன்னுடைய வாழ்க்கையை கழித்த இயக்குனர் தான் பேரரசு. பிரபல இயக்குனர்கள் ராமநாராயணன் மற்றும் மகாராஜன் உள்ளிட்டவர்களிடம் உதவி இயக்குனராக ஒரு சில திரைப்படங்களில் பணியாற்றிய பேரரசு, கடந்த 1990ம் ஆண்டு வெளியான "சாத்தான் சொல்லை தட்டாதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் "அட்மாஸ்பியர்    ஆர்டிஸ்ட்டாக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். தொடர்ச்சியாக ஒரு சில திரைப்படங்களில் அவர் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தார். இந்த சூழலில் கடந்த 2005ம் ஆண்டு அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் தளபதி விஜய் இயக்குகின்ற வாய்ப்பு.

விவாகரத்து முடிவுக்கு பின்.. ஆர்த்தியோடு நடந்த "அடுத்த பிரச்சனை" - போராடி வெற்றி பெற்ற ஜெயம் ரவி!

Thalapathy vijay

கடந்த 2005ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் "திருப்பாச்சி". இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். அந்த திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் இயக்குனராக களமிறங்கினார் பேரரசு. அது மட்டுமல்ல அதே 2005 ஆம் ஆண்டு தளபதி விஜயை வைத்து "சிவகாசி" என்கின்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தையும் அவர் கொடுத்தார். இதில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய இரு படங்களிலும் 7 மற்றும் 6 என்று மொத்தம் 13 பாடல்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் பாடல் வரிகள் எழுதியது பேரரசு தான் என்பது தான் ஹைலைட்.

Latest Videos


Thala Ajith

தளபதியை வைத்து தொடர்ச்சியாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்த பேரரசு, அடுத்தபடியாக தல அஜித் அவர்களை வைத்து இயக்கிய திரைப்படம் தான் "திருப்பதி". இந்த திரைப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு வழங்கும் மாநில விருது கிடைத்தது. அதுமட்டுமல்ல அஜிதின் இந்த திருப்பதி படத்தில் ஒலித்த 6 பாடல்களுக்கும் பாடல் வரிகள் எழுதியதும் பேரரசு தான். தன்னுடைய படங்களில், கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை மொத்தமாக அவரே எழுதிவிடும் திறன் கொண்டவர் பேரரசு. அதன் பிறகு பெரிய அளவில் முன்னணி நட்சத்திரங்களை வைத்து அவர் திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும் "புலி வருது", "பழனி", "திருவண்ணாமலை", "பந்தயம்" மற்றும் "திருத்தணி" என்று தொடர்ச்சியாக நல்ல பல படங்களை இயக்கி வந்த இயக்குனர் பேரரசுவின் சிறப்பே, தன்னுடைய திரைப்படங்களுக்கு மாவட்டங்களின் பெயரை வைப்பது தான்.

Pazhani Movie

அந்த வகையில் கடந்த 2008ம் ஆண்டு பிரபல நடிகர் பரத் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பழனி. இந்த திரைப்படத்தை இயக்கியதும் பேரரசு தான். இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள், ஸ்ரீகாந்த் தேவா இசையில் அந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

அதேபோல இந்த படத்தில் அனுராதா ஸ்ரீராம் மற்றும் உதித் நாராயணன் குரலில் ஒலித்த "திருவாரூர் தேரே பக்கம் வாடி" என்கின்ற பாடலை எழுதியதும் பேரரசு தான். இந்த பாடலை ஒருநாள் ஷூட்டிங் செய்ய வந்த போது அவசர அவசரமாக ஸ்பாட்டில் வைத்து வெகு சில நிமிடங்களில் அவர் எழுதி முடித்திருந்தாராம். தமிழ்நாட்டில் உள்ள 90% ஊர்களின் பெயர்களை மட்டுமே பயன்படுத்தி இந்த பாடலை அவர் உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஏலத்திற்கு வந்த வீடு.. ஏளனமாக சிரித்த பாலிவுட்" அதை மீறி வெற்றி கண்டவர் அமிதாப் - எமோஷனலான ரஜினிகாந்த்!

click me!