முக்கிய சீரியலை விட்டு விலகும் பிரியதர்ஷினி..! வெளியான பரபரப்பு காரணம்!

First Published Jan 5, 2023, 6:20 PM IST
நீண்ட இடைவேளைக்கு பின்னர் சீரியல்களில் நடிக்க துவங்கியுள்ள தொகுப்பாளனியும், சீரியல் நடிகையுமான பிரியதர்ஷினி தற்போது நடித்து வரும், முக்கிய சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரியும், சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ள தொகுப்பாளியும் சீரியல் நடிகையுமான பிரியதர்ஷினி நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டுப் பொண்ணு சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து, பிரியதர்ஷினி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவர்ச்சிக்கு தாவிய பிரியா பவானி ஷங்கர்..! சல்லி சல்லியாய் ஓட்டை போட்ட உடையில்.. இடையை காட்டி ஒய்யார போஸ்!

இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் ஒளிபரப்பாகி வருவதால்.. இந்த சீரியலில் இருந்து விலக பிரியதர்ஷினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் மிகவும் மிகவும் முக்கியமான 'ரேணுகா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி சீரியல் அம்மா நடிகைக்கு 45 வயதில் மறுமணமா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!

'நம்ம வீட்டு பொண்ணு'  சீரியலில் இருந்து இவர் விலகி உள்ளதால், இவருக்கு பதில் இனி சீரியல் நடிகை பானுமதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

click me!