குறும்பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன், கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த ஒருவர் அதிலிருந்து மீண்ட பின்னர் என்னென்ன பிரச்சனையெல்லாம் எதிர்கொள்கிறார் என்பதை காமெடி கலந்து சொல்லி இருந்தார் பிரதீப். புதுவிதமான கதையம்சத்தை கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.