தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார். இதனால் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாகுபலி படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹோ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார்.