தஞ்சை பெரிய கோவிலுக்கென்று காலம் காலமாக இருக்கும் சென்டிமெண்ட் காரணமாக தான் அங்கு புரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. பெரிய பதவியில் இருப்பவர்கள் யாரேனும் அந்த கோவிலுக்கு சென்றால் அவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பது தான் அந்த சென்டிமெண்டாம்.
தஞ்சை பெரிய கோவில் ஒரு குறிப்பிட்ட திசையில் அமைந்துள்ள நுழைவு வாயில் வழியாக செல்ல தவிர்ப்பதற்கும் இதுவே காரணமாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அரசியல் பிரமுகர்கள் பெரும்பாலும் அந்த கோவில் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்களாம். தற்போது பொன்னியின் செல்வன் படக்குழுவும் அந்த பயத்தால் தான் அங்கு புரமோஷன் நிகழ்ச்சி நடத்தவில்லை என பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினி ஆசைப்பட்டு கேட்டும்... பொன்னியின் செல்வனில் நடிக்க வாய்ப்பளிக்காதது ஏன்? - உண்மையை போட்டுடைத்த மணிரத்னம்