சோழர்களின் ஆட்சிக்காலம் பற்றியும், ராஜ ராஜசோழன் பற்றியும் அப்படத்தில் கூறி இருந்தனர். அப்படம் ரிலீசான பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சதய விழாவிலும் அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தால், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்ததாக கூறப்படுகிறது.