காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகர் நாக சைதன்யா தொடர்ந்து காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில், அவர் பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதனை உறுதி செய்யும் விதமாக சோபிதாவும், நாக சைதன்யாவும் லண்டனில் ஜோடியாக சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும் இந்த காதல் சர்ச்சை குறித்து நாக சைதன்யாவும், சோபிதாவும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தனர். அவர்கள் அமைதியாக இருந்தாலும், அவர்களைப் பற்றிய காதல் சர்ச்சை தொடர்ந்து காட்டுத்தீ போல் பரவி வந்தன. இதனால் வேறுவழியின்றி முதன்முறையாக காதல் சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் சோபிதா.
இதையும் படியுங்கள்... கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்ற குட்டி நயன் அனிகா சுரேந்திரன்... வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
அவர் கூறியதாவது : “என்னைப் பற்றிய காதல் வதந்திகள் பரவி உள்ளன. யார் யாரோ ஏதேதோ சொல்கிறார்கள் என்று அதையெல்லாம் நான் கண்டுகொள்வதும் இல்லை. அதற்காக வருத்தப்பட்டும் பிரயோஜனம் இல்லை. அந்த வதந்திக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதபோது அதற்கு அவசர அவசரமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எந்த தவறும் செய்யாதபோது, எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. என் வேலையை நான் பார்க்க போகிறேன்” என கூறியுள்ளார்.