புத்தகப் பிரியர்களால் காலம் கடந்து கொண்டாடப்படும் சிறந்த நாவல்கள் ஒன்று கல்கியின் கைவண்ணத்தால் உருவான 'பொன்னியின் செல்வன்' நாவல். இந்த நாவலை, படமாக்க எம்ஜிஆர், கமலஹாசன், போன்ற ஜாபவான்கள் முயற்சித்த நிலையில்... இந்த பிரம்மாண்ட படைப்பை அவர்களால் ஒரு சில காரணத்தால் படமாக்க முடியாமல் போனது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இப்படத்திற்கான பட்ஜெட் எனலாம்.