தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன், பல வருட முயற்சிக்கு பின்னர் கடந்த ஆண்டு தான் திரைவடிவம் பெற்றது. இதற்கு முக்கிய காரணம் மணிரத்னமும், லைகா நிறுவனமும் தான். அவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீசாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.