தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து தற்போது நடிகர், தயாரிப்பாளர், என உயர்திருப்பவர் விமல். அவ்வப்போது பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
undefined
கொரோனா ஊரடங்கின் போது... நடிகர்கள் விமல், சூரி ஆகியோருடன் இரண்டு இயக்குநர்கள் உட்பட சிலர் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் தடைமீறி சுற்றித்திரிந்தது சர்ச்சையை கிளப்பியது. எவ்வித அனுமதியும் இன்றி தடையை மீறி ஏரியில் மீன்பிடித்ததாக புகார் அளிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.
undefined
மேலும் ஒரு சில பண விஷயங்களிலும் அவ்வப்போது சிக்கி வருகிறார் விமல். அந்த வகையில் தற்போது, விமல் தன்னுடைய சொந்த ஊரான, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு கிராமத்தில் உள்ள விமலின் சொந்த ஊரில், அவரது குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் பலர் வசித்து வருகிறார்கள்.
undefined
இவர்கள் வீட்டிற்கு எதிரே, அந்த கிராமமக்கள் பல வருடங்களாக வழிபடும் விளக்குதூண் ஒன்று உள்ளது. இதனை சீரமைக்கும் விதமாக கிராம மக்கள் ஒன்று கூடி, இந்த விளக்கு தூணை சுற்றி, காம்பவுண்டு அமைத்து, மேடை அமைத்துள்ளனர்.
undefined
இந்நிலையில் நேற்று முன்தினம், 7 பேர் கொண்ட கும்பல் அந்த விளக்கு தூணை சுற்றி உள்ள மேடையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளியுள்ளனர். இதனை தட்டி கேட்ட கிராமமக்களையும் இவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
undefined
இதற்க்கு காரணம் விமல் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் என, அதே ஊரை சேர்ந்த செல்வம் என்கிற கோவில் பூசாரி, புத்தாநத்தம் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக விறைத்து விசாரணை நடத்துமாறு மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.
undefined