Pandian Stores 2 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் முதல் முறையாக அரசு வேலைக்கு செல்கிறார். ஆனால், அதற்கு அவரது அப்பா பாண்டியன் என்ன செய்தார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Pandian Stores 2 Today Episode : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்று. இதில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைப் போன்று 2ஆவது சீசனுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் சீசனானது 1348 எபிசோடுகள் வரையில் ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து தற்போது 2ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
26
அரசு வேலையில் சேர்ந்த செந்தில் - பாண்டியன் என்ன செய்தார்?
இதில் அப்பா – மகன் உறவை பற்றிய காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. மேலும், மகன்களுக்கு திருமணம் செய்து வைப்பது, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மருமகள், அவர்களது வீட்டார்கள் என்று குடும்பக் கதைகளை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் அரசு வேலைக்கு செந்தில் ரூ.10 லட்சம் கொடுத்து வேலை வாங்கியிருக்கிறார். அதற்கான ஆர்டரும் வந்துவிட்டது. வேலையில் சேரும் நேரமும் வந்தது. இது தொடர்பான காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
36
செந்திலுக்கு வாழ்த்து சொன்ன கதிர் மற்றும் ராஜீ
இதில், செந்தில் முதல் முறையாக அரசு வேலைக்கு செல்ல உள்ள நிலையில் அவரது மனைவி ஆசை ஆசையாக புதிய சர்ட் வாங்கி கொடுத்துள்ளார். பழனிவேல் கோயிலுக்கு சென்று வந்துள்ளார். அண்ணன், சரவணன் வாழ்த்து சொன்னார். கதிர் மற்றும் ராஜீயும் வாழ்த்து தெரிவித்தனர். அம்மா கோமதி சாப்பாடு செய்து கொடுத்தார். செந்தில் வேலைக்கு செல்ல நேரமானது. வீட்டிற்கு வெளியில் வந்து நிற்கும் போது அவரது மாமனார் காரில் அழைக்க வந்துள்ளார். ஆனால், செந்தில் தனது தம்பியுடன் பைக்கில் செல்வதாக சொல்லிவிட்டார்.
46
செந்திலுக்கு புதிய சட்டை எடுத்துக் கொடுத்த மீனா
இருவரும் பைக்கில் செல்லும் போது நடுவழியில் அரசி நின்று கொண்டிருந்தார். செந்திலுக்கு வாழ்த்தும் கூறினார். அதன் பிறகு செந்தில் மற்றும் கதிர் இருவரும் அப்பா பாண்டியனை சந்திக்க செல்வதாக கூறினர். ஆனால், அவரை பார்க்க முடியவில்லை. வேலைக்கு நேரமான நிலையில் இருவரும் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்றனர். இதற்கிடையில் பாண்டியன் தனது மகனுக்காக கோயிலில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.
56
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வேலை
அவருக்கு பிறகு அவரது மனைவி கோமதியும் செந்திலுக்காக அர்ச்சனை செய்தனர். பின்னர் இருவரும் ஒன்றாக வீட்டிற்கு சென்றனர். இதில் அவர்களுக்கு இடையில் ரொமான்ஸ் காட்சியும் இடம் பெற்றது. அது என்னவென்றால், கோமதி வர வர உடல் எடை கூடிக் கொண்டே செல்வதாக பாண்டியன் கூறினார். ஆனால், கோமதியோ தான் இன்னும் அழகாக இருப்பதாக கூறினார்.
66
செந்திலுக்கு ஜூனியர் அசிஸ்டண்ட் வேலை
இது இப்படியே சென்று கொண்டிருக்க செந்தில் வேலையில் சேர்ந்துவிட்டார். அவருக்கு மாமனார் மற்றும் மீனா அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். அலுவலகத்தில் உள்ள எல்லா ஃபார்மாலிட்டிசையும் முடித்த செந்தில் ஜூனியர் அசிஸ்டண்டாக வேலையில் சேர்ந்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 527ஆவது எபிசோடு முடிந்தது. நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.