சும்மா பேசாதீங்க; நாங்க நல்லவங்க; எங்க குடும்பம் நல்ல குடும்பம்: அடிச்சுவிட்ட மாணிக்கம்; ஷாக்கான சரவணன்!

Published : Dec 12, 2025, 10:50 PM IST

Pandian Stores 2 Serial Today 661 Episode Highlights : தங்கமயில் தொடர்பான பிரச்சனையில் ஆளாளுக்கு கேள்வி எழுப்பிய நிலையில் சும்மா எல்லாம் பேசாதீங்க, எங்க குடும்பம் நல்ல குடும்பம் என்று மாணிக்கம் கூற அதைக் கேட்டு சரவணன் அதிர்ச்சி அடைந்தார்.

PREV
14
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இதில், இப்போது குடும்ப சண்டை தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. எப்போது உண்மை, நேர்மை, நியாயம் என்று வாழ்ந்து வரும் குடும்பத்தில் பொய் சொல்லி காலத்தை ஓட்டினால் என்ன நடக்கும் என்பது தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆம், தங்கமயில் மற்றும் சரவணன் இடையிலான பிரச்சனைக்கு இப்போது குடும்பத்தோடு தீர்வு காணப்பட்டு வருகிறது.

24
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குடும்ப சண்டை

இந்த சூழலில் தான் இன்றைய எபிசோடில் எங்களது குடும்பம் ரொம்பவே நல்ல குடும்பம். இதுவரையில் எந்த தப்பும் செய்ததில்லை. நாங்கள் பாவம் அப்படி இப்படி என்று மாணிக்கம் பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், உங்களது குடும்ப லட்சனம் என்ன என்று எனக்கு தானே தெரியும். நீங்கள் செய்த எல்லா பிராடு தனத்திற்கும் நான் உடந்தையாக இருந்திருக்கிறேன். அதனால் நான் செய்தது தான் தவறு என சரவணன் கடைசியில் காசு பணம் எடுத்ததை தனது அப்பாவிடம் கூறிவிட்டார். இதற்காக நாம் மாமாவைத்தான் சந்தேகப்பட்டோம். ஆனால், காசு மாமா எடுக்கவில்லை அப்பா. இந்த ஆளு தான் எடுத்தாரு என்றார்.

34
பணம் திருடிய உண்மையை சொன்ன சரவணன்

இதைத் தொடர்ந்து மாணிக்கம் என்ன நடந்தது என்ற உண்மையை சொன்னார். அதாவது மயிலுக்கு ரொம்ப நாளாவே திருமணம் நடக்கவில்லை. அதனால், ஜோசியரிடம் சென்று ஜாதகம் பார்த்தோம். அவருக்கு தோஷம் இருக்கிறது என்று ஆரம்பித்தார்கள். அதற்குள் பாண்டியன் குறுக்கிட்டு தன்னிடம் உள்ள நிறை குறைகளை தெளிவாக பேசினார். உண்மையை சொல்லியிருந்தால் பிடித்திருந்தால் திருமணம் இல்லையென்றால் அப்படியே விட்டுவிட்டிருப்போம்.

44
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்

அப்படியே தோஷமாக இருந்தாலும் அதற்குரிய பரிகாரங்களை செய்த பிறகு திருமணம் செய்திருப்போம். 12ஆம் வகுப்பு வரை படிச்சது, 2 வயது பெரியவள் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. ஆனால், நீங்கள் உண்மையை மறைத்து அடுக்கடுககாக பொய்களை சொன்னது தான் எங்களுக்கு பிரச்சனை என்று கூறினார். இறுதியாக அவரது முடிவு என்ன என்பது தான் இப்போது எல்லோரது கேள்வியாக உள்ளது. இதற்கான பதில் நாளைய எபிசோடில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories