பவாட் கானின் துரதிர்ஷ்டமா?
2016-ல் நடந்த உரி தாக்குதலை ஒருவர் நினைவுகூர்ந்தார். பவாட் கானின் 'ஏ தில் ஹை முஷ்கில்' படம் வெளியாவதற்கு முன்பு இந்தத் தாக்குதல் நடந்தது. இப்போது 'அபீர் குலால்' படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன்பு பஹல்காமில் தாக்குதல் நடந்துள்ளது. இரண்டுமே தற்செயலா அல்லது பவாட் கானின் துரதிர்ஷ்டமா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 'ஏ தில் ஹை முஷ்கில்' 2016ம் ஆண்டு அக்டோபர் 28ந் தேதி அன்று வெளியானது. அதற்கு 40 நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 18ந் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் உரியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.
'அபீர் குலால்' எல்லை தாண்டிய காதல் கதை
'அபீர் குலால்' ஒரு எல்லை தாண்டிய காதல் கதை. படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் நடிகர் பவாட் கான் நடிப்பது இந்திய ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. ஏப்ரல் தொடக்கத்தில், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (MNS) கட்சி, மகாராஷ்டிராவில் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தது. தேசியப் பாதுகாப்பு மற்றும் இந்தியத் திரைப்படத்துறையில் பாகிஸ்தான் கலைஞர்களின் தாக்கம் ஆகியவற்றைக் காரணம் காட்டி மன்சே கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. 'அபீர் குலால்' படத்தை வெளியிடுவது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தது. இந்தப் படம் மே 9 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யின் ‘இந்த’ பிளாக்பஸ்டர் ஹிட் படம் முழுக்க முழுக்க பஹல்காமில் படமாக்கப்பட்டதா?