மீடூ குறித்து ஓவியா போட்ட பரபரப்பு ட்விட்..! எதற்காகா?

First Published May 25, 2021, 10:52 AM IST

நடிகை ஓவியா திடீர் என, மீடூ குறித்து பரபரப்பு ட்விட் போட்டுள்ளது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இது எதற்காக என்பது போல், சில கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 

“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார்.
undefined
யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது.முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான்.
undefined
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
undefined
இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார்.குறிப்பாக ஓவியா டாட்டூ தெரிய வெளியிடும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாவது வழக்கம்.
undefined
அதே போல் பிரபல அரசியல் கட்சியை விமர்சித்து சர்ச்சையில் சிக்குவதையும் ஓவியா வழக்கமாக வைத்துள்ளார்.
undefined
இந்த நிலையில் ’மீடூ’ குறித்து நடிகை ஓவியா போட்டுள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த டுவிட்டில் 'நேர்மையை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ’மீடூ’ குறித்து வெளியே பேசுவதற்கே ஒரு தைரியம் வேண்டும் என்று எனக்கு புரிகிறது' என்று தெரிவித்துள்ளார்.
undefined
ஓவியா திடீர் என இப்படி ஒரு பதிவை போட என்ன காரணம் என சிலர் கேள்வி எழுப்பி வந்தாலும், சென்னை தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக ஓவியா இந்த பதிவை போட்டிருக்கலாம் என சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
undefined
click me!