இதனிடையே கடந்த ஆண்டு நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமாக உள்ளதாகவும், அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. அப்படத்தில் நடிக்க ஹீரோ கிடைக்காமல் திண்டாடிய ஜேசன் சஞ்சய், இறுதியாக நடிகர் சந்தீப் கிஷானை கமிட் செய்துள்ளார்.