14 நாள் தனிமை மட்டும் போதாது... பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு இந்த முறை முக்கிய நிபந்தனை?

First Published Jun 24, 2021, 3:52 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து 5 ஆவது சீசனை எட்டியுள்ள நிலையில், இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

பல வருடங்களாக திரையுலகில் குணச்சித்திர நடிகர்களாகவும், காமெடியனாகவும், வில்லனாகவும், நாயகன், நாயகியாகவும் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கும் பிரபலங்கள் ரசிகர்கள் மனதை வென்று திரையுலகில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க உதவியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.
undefined
ஒரு சில பிரபலங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிஷ்டக்காற்று வீசி இருந்தாலும், பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்திகா, ஓவியா, ஜனனி ஐயர், தாடி பாலாஜி, பொன்னம்பலம், மும்தாஜ், கணேஷ் வெங்கட் ராம் , போன்ற பலருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
undefined
அதே நேரத்தில், ஆரவ், யாஷிகா, மகத், ஐஸ்வர்யா தத்தா, ஹரீஷ் கல்யாண், மற்றும் ரைசா போன்றோர் இந்த நிகழ்ச்சிக்கு பின் சில படவாய்ப்புகளை கைப்பற்றி தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.
undefined
மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதாலேயே... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபலங்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதே போல்... திரையில் பார்த்த பிரபலங்கள் உண்மையில் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே, மக்களும் விரும்பி இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.
undefined
கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 நடந்த போது அனைத்து போட்டியாளர்களும் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்ட பின்னரே பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
undefined
தற்போது இந்த 14 நாட்கள் தனிமை மட்டும் இல்லாது, கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகே பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்க படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
undefined
click me!