நித்யானந்தாவையும் விட்டு வைக்காத மீரா மிதுன்... கைலாசாவிற்கு போக ஆசையாம்...!

First Published Aug 25, 2020, 7:42 PM IST

இதுவரை திரைப்பிரபலங்களை கழுவி ஊற்றி வீடியோ வெளியிட்டு வந்த மீரா மிதுன், நித்யானந்தாவிற்கு ஆதரவாக ட்வீட் போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதிலும் அவர் சொல்லியிருக்கும் ஆசையை கேட்டு நெட்டிசன்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

பப்ளிசிட்டிக்காக சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.
undefined
பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் நபர்களில் முக்கிய நபராக மாறியுள்ளார் மீரா மிதுன். தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார்.
undefined
லாக்டவுன் நேரத்தில் விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசி ரசிகர்களை ஆத்திரத்தை அதிகரித்தார்.
undefined
இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கமெண்ட் போட ஆரம்பித்தனர்.திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கண்டித்தும் கூட, ஏன் போலீசில் புகார் கொடுத்தும் மீரா மிதுன் வாயை மூட முடியவில்லை.
undefined
ட்விட்டரில் மீண்டும், மீண்டும் விஜய், சூர்யா ரசிகர்களை வம்பிழுத்து வந்த மீரா மிதுன், திடீரென நித்யானந்தா பக்கம் திரும்பிவிட்டார்.
undefined
இதுகுறித்து அவர், “எல்லாரும் அவரை கிண்டல் செய்தார்கள், விளாசினார்கள். அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள். அனைத்து மீடியாக்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால் இன்று அவர் கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன். லாட்ஸ் ஆஃப் லவ்” என ட்வீட் செய்துள்ளார்.
undefined
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நாங்க கூட செலவுக்கு காசு தர்றோம் போயிடு... ஆனால் திரும்ப வராத என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
undefined
Meera Mithun
undefined
click me!