கெனிஷாவுடன் ஃபியூச்சர் பிளான்; முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ஜெயம் ரவி வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

First Published Sep 22, 2024, 5:05 PM IST

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி பற்றிய விவாகரத்து சர்ச்சை பூகம்பமாக வெடித்து வரும் நிலையில், தற்போது ஜெயம் ரவியே வாயை விட்டு சிக்கி உள்ள நிலையில் அவரை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
 

Jayam Ravi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தன்னுடைய கல்லூரி தோழியும், காதலியுமான , தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகும் நிலையில், ஆரவ் - அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜெயம் ரவி அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடிக்க உறுதுணையாக இருந்தது அவருடைய மனைவிதான். ஜெயம் ரவியை சுதந்திரமாக நடிக்க அனுமதித்தது மட்டுமின்றி,தன்னுடைய குடும்பம், மகன்கள், மாமியார், மாமனார் என அனைவரையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். இந்த தகவலை ஜெயம் ரவியின் பெற்றோரே கடந்த ஆண்டு ஜெயம் ரவி திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தனர். 

Jayam Ravi and Aarti

அதேபோல் ஆர்த்தியும் தன்னுடைய கணவர் ஜெயம் ரவி மிகுந்த காதலோடு பார்த்து கொள்வது, மற்றும் கர்ப்ப காலங்களில் கவனித்து கொள்வது பற்றியும் தெரிவித்திருந்தார். இரவு நேரத்தில் திடீரென எழுந்து ஏதாவது சாப்பிட கேட்டால் கூட முகம் சுழிக்காமல் தனக்கு வேண்டியதை அவர் செய்வார். அவருக்கு மறுநாள் ஷூட்டிங் இருக்கும் தூக்கம் கெடும் அதைப் பற்றி எல்லாம் ஒரு நாள் கூட அவர் கவலைப்பட்டதே இல்லை.  அந்த சமயத்தில் இவர்கள் இருவரின் பேட்டியும், மிகவும் வைரலானதோடு ஜெயம் ரவியை ரசிகர்கள் சிறந்த தந்தையாகவும், கணவராகவும், இருக்கிறார் என சமூக வலைதளத்தில் புகழ்ந்து தள்ளினர்.

கௌதமி மேல் உள்ள காதலை வெளிப்படுத்த கமல்ஹாசன் எழுதிய பாடல்! எது தெரியுமா?
 

Latest Videos


Jayam Ravi

ஆனால் யார் கண் பட்டதோ? ஒரே வருடத்தில் ஜெயம் ரவி தற்போது தன்னுடைய மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியை மிதித்துள்ளார். ஆத்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே பிரச்சனை வர காரணம் பிரபல பாடகி கெனிஷா என்பவர் தான் என கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கோவாவில் உள்ள பப்புகளில் பாடிக்கொண்டிருந்த கெனிஷா, பின்னர் ஆல்பம் பாடல்களில் பாட துவங்கினார். நடிகர் ஜீவா தயாரித்திருந்த ஆல்பம் பாடல் ஒன்றிலும் கணேஷா பாடியிருந்தார். அப்போது தான் ஜெயம் ரவிக்கும் கெனிஷாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டதாகவும் பின்னர், அதுவே ஜெயம் ரவி மாற்றத்திற்கு காரணமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

Jayam Ravi Car in Goa

ஜெயம் ரவியின் ஆடி கார் கோவா போலீஸ் இடம் இரண்டு முறை சிக்கியதாகவும், அதில் ஒரு முறை... ஜெயம் ரவியின் காரை ஒட்டி சென்றது கெனிஷா என்கிற ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவல்களை வெளியிட்டது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தான் என கூறப்பட்டது. இதுபோன்ற பல சர்ச்சைகளுக்கு, பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி கலந்து கொண்டபோது விளக்கம் கொடுத்திருந்தார்.

மணிரத்னத்தால் கமலின் 'தக் லைஃப்' படத்துக்கு கூடிய மவுசு! கோடிக்கணக்கில் பிஸினஸான டிஜிட்டல் உரிமம்!

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த போது , செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, "கடினமாக நான் உழைத்து, இத்தனை ஆண்டுகள் சேர்த்து வைத்த என் பெயரை நாசம் செய்ய நினைக்கிறார்கள். அவ்வளவு எளிதில் அதை நான் நடக்க விடமாட்டேன். முறைப்படி என் வக்கீல் மூலம் ஆர்த்தியின் தந்தையிடம் பேசிய பின்னரே, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதே போல் ஆர்த்தியின் பெற்றோரும் என்னுடைய பெற்றோரும் ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து பேசி இருந்தும், ஆர்த்தி தனக்கு எதுவுமே தெரியவில்லை என மாற்றிப் பேசுகிறார்.

ஜூன் மாதம் என்னுடைய மகன் ஆராவ்வின் பிறந்தநாள் வந்தபோது நான் சென்னையில் தான் இருந்தேன். அவனுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் அதே நாட்களில் என்னை வேறு ஒரு ஊரில் பார்த்ததாக சொல்வது முற்றிலும் பொய் என்று தன்னுடைய விளக்கத்தை கொடுத்திருந்தார். விவாகரத்து பற்றி என்னுடைய மூத்த மகன் ஆரவிடம் அவனுக்கு புரியும் படி கூறினேன். அயான் சின்ன பையன் என்பதால் அவனிடம் இது குறித்து என்னால் பேச முடியவில்லை. அதேபோல் என்னுடைய மூத்த மகன் ஆரவ் எங்கள் இருவரையும் சேர்ந்து வாழ கூறினான். ஆனால் அதற்கான சூழல் இல்லை என்பதையும் தெளிவாக கூறிவிட்டேன்.

சமந்தாவின் அண்ணனுக்கு வெளிநாட்டில் நடந்த திருமணம்! வைரலாகும் குடும்ப புகைப்படம்!

என்னை பாடகி கெனிஷாவுடன் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். அவர் பாடகி மட்டுமல்ல ஒரு சைக்காலஜிஸ்ட். பல பேரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி அப்படி பேசக்கூடாது. வருங்காலத்தில் நானும் கெனிஷாவும் இணைந்து ஒரு ஹீலிங் சென்டர் திறக்க முடிவு செய்துள்ளோம். அதன் மூலம் பலருக்கு உதவ நினைக்கிறோம் என பேசியுள்ளார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி பல வருடம் காதலித்து, 15 வருடம் குடும்பம் நடத்திய மனைவியை குறையாக பேசி... ஒரு பாடகி குறித்து இப்படி பேசியுள்ளது... இறவருக்கும் இடையே ஏதோ... இருக்க போய் தான் இவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என நெட்டிசன்கள், சமூக வலைதளத்தில் வெளுத்தி வாங்கி வருகிறார்கள்.

click me!