துணிவு திரைப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இப்படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 1 மணிக்கு திரையிடப்பட்டது. படம் செம்ம மாஸாக இருப்பதாக முதற்கட்ட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்துக்கு தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் வருவதால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த வசனம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துணிவு படத்தில் இப்படி ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது பேசுபொருள் ஆகி உள்ளது.