இந்த வசனம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துணிவு படத்தில் இப்படி ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது பேசுபொருள் ஆகி உள்ளது.