துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைகாண உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதுமட்டுமின்றி துணிவு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க துணிவு படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அந்நிறுவனம் ரிலீசுக்கு முன்பே கைப்பற்றும் முதல் அஜித் படம் இதுவாகும். அதுமட்டுமின்றி இதற்காக மிகப்பெரிய தொகையையும் அந்நிறுவனம் கொடுத்துள்ளதாம். அதேபோல் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கி உள்ளதாம். இதன்மூலம் ரிலீசுக்கு முன்வே அஜித்தின் துணிவு திரைப்படம் வசூல் வேட்டையை தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... லெஜண்டுக்கு கிடைச்ச வரவேற்பு கூட பிரின்ஸ் படத்துக்கு கிடைக்கலயே.. பாக்ஸ் ஆபிஸில் அண்ணாச்சியிடம் தோற்றுப்போன SK