அதாவது அகஸ்தியா தியேட்டர், தனிநபர் சொத்து அல்ல. அகஸ்தியா அறக்கட்டளையின் கீழ் தான் இயங்கி வருகிறது. அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என்பதால், இதனை விற்க முடியாது. ஏற்கனவே மெட்ரோ பணிகளுக்காக கொஞ்சம் இடத்தை கொடுத்து விட்டதால், மீதமுள்ள இடத்தில் சங்கரா நேத்ராலயாவுடன் இணைந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டவிருக்கிறோம். உண்மையில் இதற்கான ஒப்பந்தம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது. இதனால் நயன்தாரா இந்த இடத்தை வாங்கி விட்டார் என்று பரப்பப்படும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை என்றும், இதற்கான பேச்சுவார்த்தை கூட நடக்கவில்லை என தெரிவித்துள்ளனர். (நன்றி விகடன்)