ரசிகர்களை பொறாமை பட வைத்த நயன்தாரா மகனின் பாசம்! லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published Sep 22, 2024, 9:27 AM IST

நடிகை நயன்தாரா, தன்னுடைய மகனுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட, இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.
 

நடிகை நயன்தாரா, தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட, குழந்தைகளுடன் துபாய்க்கு சென்ற நிலையில், அங்கு தான் கடந்த ஒரு வாரமாக தன்னுடைய விடுமுறையை கழித்து வருகிறார். அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தி வரும் நயன்தாரா, தற்போது மகன் தன்னை கொஞ்சும் சில புகைப்பங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜெலஸ் ஆக்கி உள்ளார்.

தமிழ் திரையுலக ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, எந்த அளவுக்கு மிகவும் பிரபலமோ.. அதே அளவுக்கு சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாதவர். சிம்புவுடன் ஏற்பட்ட காதல், பிரபு தேவாவை கடந்து ஒருவழியாக விக்னேஷ் சிவனிடம் முடிவடைந்தது. பிரபு தேவாவுடனான பிரிவுக்கு பின்னர் மனம் நொந்து.. மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வார்த்தைகள் ஆறுதல் கொடுத்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க துவங்கினர்.

அதன் படி 2015-ம் ஆண்டு 'நானும் ரெளடி தான்' படத்தில் நயன்தாரா விக்கி இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் போது இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், சுமார் 7 வருடங்கள் காதலித்து பின்னர் இருவரும் திருமணம் உறவிலும் இணைந்தனர். திருமணமான நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த தகவலை வெளியிட்டு நயன்தாரா இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், இந்த விஷயமே இருவரையும் சர்ச்சையில் சிக்க வைத்தது.

சமந்தாவின் அண்ணனுக்கு வெளிநாட்டில் நடந்த திருமணம்! வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Latest Videos


அதாவது தமிழகத்தில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதற்கு சில விதிமுறைகள் உள்ள நிலையில். அதை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்க படுகிறது. அதாவது இந்தியாவில் சரகேசி முறை தடைசெய்யப்பட்டுள்ளது. ஒருவேளை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், திருமணம் ஆகி 5 வருடங்களு மேல் ஆகி இருக்க வேண்டும். உடல் அளவில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் பச்சத்தில் மட்டுமே இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இந்த சர்ச்சை பற்றி எரிந்து கொண்டிருந்த போதே, தமிழக அரசு சார்பில்... விசாரணைக்கு புதிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

உரிய விசாரணைக்கு பின்னர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் 2016-ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதை உறுதி செய்தனர். அதே போல் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு தான் குழந்தை பெற்று கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும்.. திரைப்பட பணிகளிலும், அவர்கள் செய்து வரும் பிஸினஸிலும் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் குழந்தைகளை பார்த்து கொள்வதிலும், அவர்களுடன் நேரம் செலவிடுவதை மறைக்கவும் தவறுவது இல்லை. ஷூட்டிங் இருந்தால் கூட நயன்தாரா தன்னுடைய குழந்தைகளை பார்த்து கொள்வதற்காக குடும்பத்தை ஷூட்டிங் நாடாகும் பகுதிக்கே அழைத்து சென்றுவிடுகிறார். 

பெங்களூரில் புதிய வீடு வாங்கி... கிரஹப்பிரவேசம் செய்த நடிகை மிருணாளினி ரவி! வைரல் போட்டோஸ்!

இந்நிலையில் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி... குழந்தைகளுடன் துபாய்க்கு சென்றுள்ள நிலையில், அங்கு நயன்தாராவை அவரின் மகன் கன்னத்தை தட்டி, முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் அம்மா மீதான மகனின் பாசம் பொறாமை கொள்ள வைக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதே போல் நயன்தாரா தன்னுடைய மகனுடன் சேர்ந்து இயற்க்கை அழகை ரசிக்கிறார், இந்த போட்டோஸ் தான் தற்போது வைரலாகி வருகிறது.

click me!