இதுகுறித்து தனுஷுக்கு நயன்தாரா எழுதி உள்ள கடிதத்தில் அடுக்கடுக்கா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த கடிதத்தில் “ எந்த பின்புலமும் இல்லாமல், தனி ஒரு பெண்ணாக சினிமாவில் சாதிப்பது எவ்வளவு போராட்டம் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி நான் இன்று இருக்கும் நிலையை அடைந்திருக்கிறேன். உங்கள் தந்தை கஸ்தூரி ராஜாவின் ஆதரவுடன், உங்கள் அண்ணன் செல்வ ராகவனின் உதவியுடன் திரைக்கு வந்து இன்று பிரபல நடிகராக மாறி இருக்கும் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் Nayanthara : Beyond the Fairy tale’ ஆவணப்படத்தை என்னை போலவே எனது ரசிகர்களும், எனது நலன் விரும்பிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யவே அனைத்து தடைகளையும் மீறி இந்த ஆவணப்படத்தை வெளியிட தயாராகி இருக்கிறோம்.