தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராகிவிட்ட தனுஷ். ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். அவர் சமீபத்தில் நடித்த திருச்சிற்றம்பலம் வெளியாகியிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படம் திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதை தொடர்ந்து தற்போது தனுஷின் நானே வருவேன் படம் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
அதோடு செல்வராகவன் முக்கிய ரோலில் தோன்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு, சீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான நானே வருவேன், பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக களமிறங்கியிருந்தது. ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...இதையும் படியுங்கள்... சர்தார் வசூல்ல பாதி கூட இல்ல... இரண்டாவது நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பிரின்ஸ்
naane varuven
அண்ணன் தம்பியென இருவரில், ஒருவர் சைக்கோ கில்லராக இருக்கிறார். இவர்களுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. இறுதியில் சைக்கோ கில்லரின் மகன் செல்வராகவனை கொலை செய்து விடுகிறார். தன்னை போலவே தன் மகனும் உருவாவதை நினைத்து கலைங்கி நிற்கிறார். இத்துடன் இந்த படம் முடிவடைகிறது. இதன் இரண்டாம் பாகமும் காத்திருக்கிறது.