கோலிவுட்டின் இளவரசன் என்று கொண்டாடப்படுபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தால் சாதிக்க முடியாது என்கிற யூகங்களையெல்லாம் தகர்த்தெறிந்து, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உயர்ந்துள்ளார். இந்த இடம் அவரது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.
பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன், என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். தொடர்ந்து வெற்றிகளை குவித்த இவருக்கும் சில சறுக்கல்கள் இருந்தன.