பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் தற்போது வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபி ஈத் கபி தீபாவளி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆன பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சல்மான் கான். இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்தது.
இதனிடையே மும்பை மாநகரின் புதிய போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் பன்சல்கரை சமீபத்தில் சந்தித்த நடிகர் சல்மான் கான், அவரிடம் தனக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கொடுக்குமாறு விண்ணப்பித்திருந்தார். கமிஷனர் விவேக் பன்சல்கரும் இதுகுறித்து ஆலோசித்து முடிவை சொல்வதாக கூறி இருந்தார்.