அசைவத்துக்கு நோ சொல்லிவிட்டு... திடீரென சைவத்துக்கு மாறிய ஏ.ஆர்.ரகுமான் - வைரல் பதிவின் பின்னணி என்ன தெரியுமா?

First Published Aug 1, 2022, 9:58 AM IST

AR Rahman : அசைவ பிரியரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீரென தான் சைவத்துக்கு மாறி உள்ளதாக கூறி டுவிட்டரில் பதிவிட்ட பதிவு மிகவும் வைரல் ஆனது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த ஆண்டின் முதல் பாதியில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் அவரின் ஆதிக்கம் தான் அதிகளவில் இருக்கும். ஏனெனில் அவர் இசையமைத்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. கடந்த மாதம் இரவின் நிழல் படம் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்றது.

இந்த மாதம் அவர் இசையமைத்த மற்றொரு படமான விக்ரமின் கோப்ரா திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதன்பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படம் ஏ.ஆர்.ரகுமான் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தொடர்ந்து நிர்வாணமா போட்டோஷூட் நடத்துங்க ரன்வீர்.. உங்கள இப்படி பார்க்கதான் விரும்புறேன்- பிரபல நடிகை கோரிக்கை

இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் இருந்து பொன்னி நதி என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானே பாடி உள்ள இப்பாடலுக்கு வெளியானது முதல் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் போட்ட டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்த 10 நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன் என குறிப்பிட்டு தட்டில் இருக்கும் சைவ உணவை புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தார். அசைவ பிரியரான ஏ.ஆர்.ரகுமான் திடீரென சைவத்துக்கு மாறியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவர் மொஹரம் பண்டிகைக்கு முந்தைய 10 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவாராம். வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் தான் அவர் தற்போது சைவத்து மாறி உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்..! 'பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!

click me!