பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் தான் பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளார். இதற்கு காரணம் இவர் நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் தான். இவர் ஆடையின்றி நடத்திய போட்டோஷூட்டின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வைரல் ஆனது.
அவரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டுக்கு கிடைத்த ஆதரவை விட எதிர்ப்புகள் தான் அதிகம் என்றே சொல்லலாம். குறிப்பாக மும்பையில் உள்ள காவல்நிலையத்தில் ரன்வீருக்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது. அவர் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த லிஸ்டில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தான் துபாயில் இருந்து திரும்பியது முதல் எங்கு பார்த்தாலும் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் பற்றிய பேச்சாகத் தான் இருக்கிறது. இந்த போட்டோஷூட்டில் அவர் மிகவும் ஹேண்ட்சமாக உள்ளார்.