விசாரணைக்கு ஆஜரான நடிகை அனன்யா பாண்டே..! வீட்டிலேயே NCB செய்த அதிர்ச்சி செயல்..!

First Published Oct 21, 2021, 6:37 PM IST

மேலும் அவரை மதியம் 2 மணிக்கு NCB அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என அதிகாரிகள் கூறினார். எனவே அனன்யா பாண்டே (Ananya Panday) தன்னுடைய தந்தையுடன் NCB அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றார்.

ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், இன்றைய தினம் பாலிவுட் இளம் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் அதிரடி சோதனை செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை NCB அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனன்யா பாண்டே தன்னுடைய பெற்றோருடன் மும்பையில் வசித்து வரும் பாந்த்ரா வீட்டில் இன்று காலை திடீர் என NCB அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அவரை மதியம் 2 மணிக்கு NCB அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என அதிகாரிகள் கூறினார். எனவே அனன்யா பாண்டே தன்னுடைய தந்தையுடன் NCB அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றார்.

ஆர்யன் கானின் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை சோதனை செய்த பொது, அனன்யாவின் பெயர் அடிபட்டுள்ளது. எனவே தான் இந்த அதிரடி சோதனையை NCB அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணைக்காக அனன்யாவின் வீட்டிற்கு சென்ற போது, யாரும் எதிர்பாராத விதமாக திடீர் என அனன்யாவின் போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை NCB அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், அதனை வைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் அறிமுக நடிகை ஒருவரும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அவரது பெயர் மற்றும் மற்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

click me!