கடந்த 1969ம் ஆண்டு பிரபல இயக்குனர் சி.வி ஸ்ரீதர் இயக்கத்தில் எம்,எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான திரைப்படம் தான் "சிவந்த மண்". சிவாஜி கணேசன், எம்.என் நம்பியார், காஞ்சனா, நாகேஷ் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார்கள். இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியது கண்ணதாசன் தான். குறிப்பாக "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை" என்கின்ற பாடலுக்கான மெட்டும், அந்த பாடல் வரிகளும் அமைக்கப்பட்ட பிறகு, அந்த பாடலை யார் பாடுவது என்கின்ற கேள்வி எழுந்தது.
அதற்காக பல முன்னணி பாடகிகளை அணுகியுள்ளார் எம்.எஸ் விஸ்வநாதன், ஒரு கட்டத்தில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரே அந்த மெட்டையும், வரிகளையும் கேட்டுவிட்டு, அய்யயோ என்னால் இதை பாடமுடியாது என்று கூற, அதன் பிறகு இங்க வாம்மா என்று எல்.ஆர். ஈஸ்வரியை அழைத்து அந்த பாடலை பாடச்சொல்லியுள்ளார் MSV. அந்த பாடல் வெளியாகி 55 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இப்பொது கூட அந்த பாடலை யாரும் அவ்வளவு நேர்த்தியாக பாடிவிடமுடியாது. அப்படி ஒரு மெகா சம்பவத்தை செய்த லெஜெண்ட் தான் விஸ்வநாதன்.
"வித்அவுட் மேக்அப்.. Rugged லுக்கில் மிரட்டப்போறேன்" அடுத்த படம் பற்றி பேசிய "லெஜெண்ட்"!