அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராயுடு ஓய்வு பெற்றுவிட்டதால் அவருக்கு பதிலாக யோகிபாபுவை அணியில் சேர்த்துக் கொள்வீர்களா என தோனியிடம் பாவனா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து தோனி பேசியதாவது : “யோகிபாபுவுக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இருக்கிறது என எனக்கு தெரியும். அவருக்காக சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் பேச நான் தயாராக இருக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன், யோகிபாபு மேட்ச் விளையாடவும், பயிற்சிக்கும் சரியாக கால்ஷீட் கொடுக்க வேண்டும். அதற்கு அவர் சம்மதித்தால் நான் அணி நிர்வாகத்திடம் பேச தயார்” என பதிலளித்தார்.