இந்நிலையில், இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், வாடகைத் தாய் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின்னர் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதேபோல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், தேவைப்பட்டால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக வாடகைத் தாய் மூலம் நயன் - விக்கி ஜோடி குழந்தை பெற்ற விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... பூவையாரை தொடர்ந்து சொந்தமாக கார் வாங்கிய மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்... காரின் விலை இத்தனை லட்சமா?