மைம் கலை கற்று ஒரு மேடை நடிகராக பிரபலமாகி, பின்னர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் மைம் கோபி. சென்னையைச் சேர்ந்த இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான 'கண்ணும் கண்ணும்' என்கிற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதன் பின்னர் ஆடாத ஆட்டம், துரோகி, உயர்திரு 420, வாயை மூடி பேசவும், மெட்ராஸ், கயல், என்னமோ நடக்குது, போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்தார்.