‘இந்த தேகம் மறைந்தாலும்... இசையாய் மலர்வேன்’ என்கிற பாடல் வரியை கேட்ட பின்னர் அனைவருக்கும் முதலில் மனதுக்கு வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான். அவருடைய குரல்களால் மெருகேறிய பாடல்கள் ஏராளம். இத்தகைய சாதனைக் கலைஞனான எஸ்.பி.பி, அவரது குரலில் முதன்முதலில் பாடிய தமிழ் பாடல் ஆயிரம் நிலவே வா என்கிற பாட்டு தான். எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண் படத்துக்காக அவர் இப்பாடலை பாடினார்.