கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து, தனுஷை வைத்து 'கர்ணன்', உதயநிதியை வைத்து 'மாமன்னன்' ஆகிய படங்களை இயக்கினார். தற்போது 'வாழை' என்கிற திரைப்படத்தை இயக்கிய நிலையில், இப்படம் நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.