"பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான், கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷை இயக்குகின்ற வாய்ப்பு. அவர்களுடைய காம்பினேஷனில் வெளியான "கர்ணன்" திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சில சர்ச்சைகளையும் இந்த திரைப்படம் சந்தித்தாலும், தன் சொந்த வாழ்க்கையில் சந்தித்த பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தான் தன்னுடைய படங்களை இயக்கி வருவதாக கூறியிருந்தார் மாரி செல்வராஜ். தமிழ் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனராக அவர் மாறினார்.