தமிழ் சினிமாவில் இதுவரை பிளாப் கொடுக்காத வெகு சில இயக்குனர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் மாரி செல்வராஜ் என்றால் அது மிகையல்ல. பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான "கற்றது தமிழ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், துணை இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் களமிறங்கினார் மாரி செல்வராஜ். தொடர்ச்சியாக இயக்குனர் ராமின் திரைப்படங்களில் பணியாற்றி வந்த மாரி செல்வராஜ், கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தன்னுடைய பயணத்தை தமிழ் சினிமாவில் தொடங்கினார்.
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை படிப்படியாக பல திரைப்படங்களில் கூறி, மக்கள் மனதில் மிகச்சிறந்த இடத்தை ஒரு இயக்குனராக பிடித்து இருக்கிறார் மாரி செல்வராஜ் என்றால் அது மிகையல்ல.
சோக பாடலை அப்படியே குத்து பாட்டாக மாற்றிய இளையராஜா - கமலுக்காக அவர் செய்து மெகா சம்பவம்!