சிகரெட் பழக்கத்தை கைவிட்ட பின் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானவையாக இருந்தன. நான் தெலுங்குப் படமொன்றில் நடித்தபோது, வில்லனுக்குத் தகவல் கொடுக்க ஏறி இறங்கி ஓட வேண்டிய ஒரு கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்தார்கள். அது 10-11 டேக்குகளுக்குப் போனால், டயலாக் பேசுவதற்கு முன் நான் மூச்சு விட வேண்டும். ஆனால், இயக்குனர் 'கட்...இன்னும் ஒன்று' சொல்வார். அந்த மூச்சை எடுக்காவிட்டால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. அப்போது தான் என் உடலில் சிகரெட் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்தேன். மெதுவாக எல்லோரிடமும் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று சொன்னேன். மது கூட அருந்துங்கள், ஆனால் புகைபிடிக்காதீர்கள் எனக் கெஞ்சுவேன். அதற்கு நான் உதாரணம்” என அந்த பேட்டியில் மனோபாலா கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... அன்று அவர் பாராட்டியது என் நெஞ்சில் நிழலாடுகிறது..! மனோபாலா மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!