தமிழ் சினிமாவில் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வனை நனவாக்கியவர் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்திருந்தார் மணிரத்னம். பிரம்மாண்ட கதையம்சம் கொண்ட படம் இது என்பதால், அதற்கு ஏற்றார்போல் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் நடிக்க வைத்திருந்தார்.