மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன், கடந்த மாதம் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.