இப்படி மலேசியா வாசுதேவனின் மகன் மகேந்திரன் பற்றி நமக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தாலும், அவருடைய தங்கையும் மலேசியா வாசுதேவனின் மகளுமான பிரசாந்த்னி குறித்து நம்மில் பலருக்கு பெரிய அளவில் தெரியாது. உண்மையில் அவரும் ஒரு மிகச்சிறந்த பாடகி தான். தமிழ் திரை உலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.
பாடகி பிரசாந்தினியும் தனது அண்ணனை போல திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். கடந்த 1983ம் ஆண்டு பிறந்த அவர், கடந்த 2008ம் ஆண்டு பிரேம்நாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு ஒரு மகன் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2001ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான, நடிகர் ஷாமின் 12B திரைப்படத்தின் மூலம் தான் இவர் பாடகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற "லவ் பண்ணு" என்கின்ற பாடலை, பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்துடன் இணைந்து பாடியது பிரசாந்தினி தான். இந்த பாடல் மட்டுமல்ல பிரசாந்தின் "வின்னர்" திரைப்படத்தில் ஒலித்த "கோழி கொக்கர கோழி", "வாரணம் ஆயிரம்" படத்தில் வந்த "முன்தினம் பார்த்தேனே", "அயன்" திரைப்படத்தில் வந்த "விழி மூடி யோசித்தால்", "ஆடுகளம்" படத்தில் வரும் "அய்யயோ நெஞ்சு" போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியது பிரசாந்தினி தான். இறுதியாக தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான "மகா மகா" என்கின்ற திரைப்படத்தில் தான் இவர் இறுதியாக பாடல்களை பாடி இருந்தார்.