ஸ்கூல் படிக்கும்போதே நெருங்கிய தோழிகளாக இருக்கும் இருவர் லெஸ்பியனாக மாறியதைப் பற்றியது தான் இப்படம். இந்த இருவரில் ஒருவர் விருப்பமின்றி ஒருவனை திருமணம் செய்துகொள்கிறாள், அவன்மூலம் பாலியல் ரீதியாக பல துன்புறுத்தல்களையும் அனுபவிக்கிறாள். மற்றொரு தோழி, வலுக்கட்டாயமாக கன்னியாஸ்திரி ஆக்கப்படுகின்றாள்.
ஆணின் பாலியல் கொடுமையால் அவதிப்படும் ஒரு பெண்ணும், ஆண் துணையே இல்லாமல் வாழ்க்கையை வெறுப்புடன் வாழும் ஒரு பெண்ணும் சேர்ந்து தங்களது சுய இன்பத்திற்காக லெஸ்பியனாக மாறுகிறார்கள். அவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? அவர்களை ஏற்றுக்கொண்டதா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதையாம்.