ஜெயிலர் அப்டேட் கொடுத்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

Published : Aug 08, 2022, 01:33 PM IST

முன்னதாக படத்தின் இயக்குனர் விருது விழா ஒன்றில் படப்பிடிப்பு  ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக தெரிவித்திருந்தார்.

PREV
14
ஜெயிலர் அப்டேட் கொடுத்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?
jailer

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இறுதியாக அண்ணாத்த படத்தில் நடித்து முடித்து இருந்தார் ரஜினிகாந்த். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அண்ணன் தங்கையின் பாசத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் 90கள் ரஜினியை கண்முன் நிறுத்தி இருந்தது. 

24
jailer

இந்த படத்தை அடுத்து தற்போது ரஜினி தனது 169 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விஜயின் பீஸ்ட்  படத்தை இயக்கியர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அனிருத் இசையமைப்பது குறித்து அறிவிப்பு முன்கூட்டியே வெளியாகிவிட்டது.

34
jailer

இதற்காக நெல்சன், அனிருத், ரஜினி மூவரும் ஸ்டைலாக என்ட்ரி கொடுத்த ப்ரோமோ வெளியாகி வைரலாகின. இதைத்தொடர்ந்து 169 படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தது. ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர்  படப்பிடிப்புக்கு தயாராகி விட்டதாக தெரிகிறது. இதன் முந்தய வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

44
jailer

இந்நிலையில் இன்று விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் இடம் செய்தியாளர்கள் அடுத்த பிராசஸ் என்ன சார் என்று கேள்வி கேட்டுள்ளன.ர் அதற்கு பதில் அளித்த ரஜினி ஸ்டைலான சிரிப்புடன் அடுத்து என்ன ஷூட்டிங் தான் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கைரலாகி வருகிறது. 

முன்னதாக படத்தின் இயக்குனர் விருது விழா ஒன்றில் படப்பிடிப்பு  ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக தெரிவித்திருந்தார். ஆக்சன் திரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில்கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிப்பதை அவரே உறுதி செய்திருந்தார். இதில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைய உள்ளது.

இவர்களில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய், முக்கிய வேடத்தில் பிரியங்கா மோகன், எதிர்நாயகனாக  சிவராஜ்குமார் நடிப்பார்கள்  என தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது டெல்லிக்கு  சென்று விட்டு திரும்பியுள்ளார். அங்கு  75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லிக்கு சென்ற தென்னக என்சிசி குழந்தைகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories