9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலர் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகர்

Published : Aug 23, 2022, 05:20 PM ISTUpdated : Aug 23, 2022, 05:26 PM IST

மலையாள நடிகர் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலர் மூலம் தமிழுக்கு மீண்டும் என்ட்ரி கொடுப்பது உறுதியாகியுள்ளது.

PREV
13
 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலர் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகர்
jailer

ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது.முன்னதாக ரஜினியின் ஜெயிலர் கெட்டப் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. முதல் தோற்றம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. புதிய தகவலாக ரஜினியின் புதிய படத்தில் சர்ச்சைக்குரிய மலையாள நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மலையாள திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகர் விநாயகன். இவர் முன்னதா 'ஒருத்தி' என்னும் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசி இருந்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் இவர்  தனது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பும் கேட்டிருந்தார் விநாயகன்.

மேலும் செய்திகளுக்கு....திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் பாரதிராஜா ....என்ன காரணம் தெரியுமா?

23
jailer

இவர் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று இவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம். போலீஸ் ஸ்டேஷன் செட்டில் ரஜினிகாந்த் மற்றும் விநாயகனின்  காட்சிகள் இடம்பெறும் என தெரிகிறது.

முன்னதாக சியான் விக்ரமின் துருவ நட்சத்திரங்கள் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார் விநாயகன். ஆனால் இந்த படம் உருவாக காலதாமதமாகி வருகிறது.  இந்நிலையில் மலையாள நடிகர் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலர் மூலம் தமிழுக்கு மீண்டும் என்ட்ரி கொடுப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு....உள்நாட்டு சுற்றுப்பயணத்தை துவங்கிய சீயான்..எதற்காக தெரியுமா

33
jailer

இவர் திமிரு, சிலம்பாட்டம் ,எல்லாம் அவன் செயல், சிறுத்தை ஆகிய படங்களில் நடித்திருந்தார். 2013ல் தனுஷின் மரியான் படத்தில் இறுதியாக தோன்றினார் விநாயகன்.  இதற்கிடையே சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் வசந்த் ரவி ஆகியோரும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு.... "இது எங்கள் பிரச்சனை "சிறை தண்டனை குறித்து தடாலடி அறிக்கை விட்ட லிங்குசாமி

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் பட குழு ஹைதராபாத்தில் படப்பிடிப்பை துவங்கி விட்டனர்.. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க, பிரபல சண்டை பயிற்சி மாஸ்டர், சிவா தன மகன்களுடன்  படத்திற்கான ஆக்சன் சீக்வென்சை மேற்கொள்கிறார் என முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories