‘விடாமுயற்சி’ விஸ்வரூப வெற்றியை கொடுக்குமா..! அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது ஏகே 62 பட டைட்டில்

Published : May 01, 2023, 12:10 AM IST

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஏகே 62 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

PREV
14
‘விடாமுயற்சி’ விஸ்வரூப வெற்றியை கொடுக்குமா..! அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது ஏகே 62 பட டைட்டில்

நடிகர் அஜித் கடந்தாண்டே கமிட் ஆன திரைப்படம் தான் ஏகே 62. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என கடந்தாண்டு மார்ச் மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆன பின்னர் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க விக்னேஷ் சிவன் ஆயத்தமாகி வந்த சமயத்தில் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை அப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டனர்.

24

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை இயக்குனராக கமிட் செய்தது லைகா. அவர் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடிக்க தாமதம் ஆனதால் ஏகே 62 படத்தின் அப்டேட்டையும் வெளியிடாமல் லைகா நிறுவனம் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. அந்த வகையில் 3 மாதங்களை ஓட்டிவிட்ட அந்நிறுவனம் இதற்குமேல் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கக்கூடாது என முடிவெடுத்து ஒரு வழியாக ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிவிட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்... இப்படி ஒரு வடிவேலுவை பார்த்ததே இல்லையே..! மாமன்னன் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியானது

34

நடிகர் அஜித் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ஏகே 62 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘விடாமுயற்சி' என்ற மாஸ் ஆன டைட்டிலை வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதைப்பார்த்து உற்சாகத்தில் திளைத்துப் போன ரசிகர்கள், இந்தப் படம் அஜித்துக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும் என பதிவிட்டு வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

44

அஜித்தின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்கும் விதமாக லைகா நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட்டுள்ளதால் சோசியல் மீடியாவே ஸ்தம்பித்துப் போய் உள்ளது. ‘விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக இதனை எடுக்க மகிழ் திருமேனி திட்டமிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி அஜித்தின் கடந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இதையும் படியுங்கள்... ஆந்திர அரசியலில் புயலை கிளப்பிவிட்டு... சைலண்டாக வந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த ரஜினி

click me!

Recommended Stories