இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்கு அடுத்த மாதம் தான் விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா தரப்பு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்காததால், பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்குப் பின்னர் விசாரிப்பதாக கூறி, மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்... அட ஹனுமான் படத்தில் வருவது திருச்சிற்றம்பலம் நாயகி நித்யாமேனனா? சிறு வயதில் எவ்ளோ க்யூட்டாக இருக்காங்க..