அப்போது அவர் இயக்கிய முதல் படமான மாநகரத்தில், நாயகன் ஸ்ரீயை சென்னை மீதான வெறுப்பு கொண்ட இளைஞனாக காட்டியது ஏன் என்றும், நிஜத்தில் உங்களுக்கு சென்னை பிடிக்குமா? பிடிக்காதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், நான் கோவை அருகே கிணத்துக்கடவு என்கிற சின்ன ஊரை சேர்ந்தவன். அப்போது அங்கிருந்து கல்லூரியில் படிக்க சென்றபோது கோயம்புத்தூரே எனக்கு புதுசா இருந்தது. அந்த நகர சூழலுக்கு என்னால் என்னை மாற்றிக் கொள்ளவே வெகு நாட்கள் ஆனது.